ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

Date:

ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருமலை எங்கும் பக்தி சூழ்ந்த நிலையில், வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று ஆன்மிக ரீதியாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே உற்சவ மூர்த்திகளான மலையப்பர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் நடந்தன. அதற்கு முன்னர் 9 டன் மலர்களை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் சமர்ப்பித்தனர்.

இந்தநிகழ்ச்சி குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக ஆணையர் அனில்குமார் சிங்கால் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

பிரம்மோற்சவம் முடிந்த பின் கார்த்திகை மாதத்தில், பெருமாளின் திருவோணம் நட்சத்திர நாளில் புஷ்ப யாகம் நடத்துவது பழமையான ஐதீகம். 15ஆம் நூற்றாண்டு வரை அரசர்கள் இந்த யாகத்தை செய்துள்ளனர். பின்னர் இடைநிறுத்தப்பட்ட இந்த யாகம், 1980 முதல் திருப்பதி தேவஸ்தானத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டைய யாகத்தில் 16 வகை பூக்கள், 6 வகை துளசி மற்றும் தவனம் உள்ளிட்ட இலைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 5 டன் மலர்கள் தமிழகத்திலிருந்தும், மிச்ச 4 டன் மலர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பக்தர்களின் நன்கொடையாக வந்தவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு நீலகிரி: பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ‘ரிவால்டோ’...

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி திருச்சி: இயற்கை...

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம் காரைக்கால்: “ராகுல் காந்தி பொய்...

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம்...