• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 8, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)

athibantv by athibantv
ஜூன் 8, 2026
in Big-News, World
0
அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 📋

அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் தற்போது மீறியுள்ளது. இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் ஈரான், இந்தத் தாக்குதல்கள் அடுத்த 7 நாட்களுக்குத் தொடரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையப் பகுதி, இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறித் தாக்கி வருவதால் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

Related posts

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பேரழிவும் சுனாமி எச்சரிக்கையும்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பேரழிவும் சுனாமி எச்சரிக்கையும்

ஜூன் 8, 2026

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா இருப்பதால், இஸ்ரேல் எதிர் தாக்குதல்களை நடத்தி அதைத் கெடுக்க வேண்டாம் என நெதன்யாகுவிடம் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை அமெரிக்காவின் பேச்சை மீறி இஸ்ரேல் தனிச்சையாகத் தாக்கினால், அதன்பின் அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு இராணுவ அல்லது தூதரக உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆரம்பத்தில் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த நெதன்யாகு, பின்னர் ஓரளவுக்கு இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரான் போர் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் தற்போதைய ஏவுகணைத் தாக்குதல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால், அது ஈரானுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைப் பாதிக்காது எனக் கூறியுள்ளார். அதேநேரம், ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடுமையான பொருளாதாரத் தடைகளும், அமெரிக்காவின் தரைப்படைத் தாக்குதலும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், கள எதார்த்தம் அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் ஈரானுக்கு எதிராக “அளவுக்கு மீறிய சக்தியைப் பயன்படுத்துவோம்” என்று மிரட்டிய அதிபர் ட்ரம்ப், இப்போது தான் ஏற்படுத்திய குழப்பங்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் நாட்டின் உதவியை நாடித் திணறி வருகிறார். போருக்கு முன்பே, அதாவது கடந்த பிப்ரவரி 21 அன்றே, “ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடியும், அது அமெரிக்காவை முட்டுச்சந்தில் நிறுத்தும்” என்று சவுதி அரேபியா எச்சரித்திருந்தது. அன்று சவுதியின் குரலை ஆணவத்துடன் நிராகரித்த ட்ரம்ப் நிர்வாகம், இன்று போரில் இருந்து வெளியேற வழிதெரியாமல் தவித்து வருகிறது.

மறுபுறம், அமெரிக்க பாதுகாப்பு மசோதாவின் 224-வது பிரிவின் கீழ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவக் கட்டமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்டு ஆயுத உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன்கள் மற்றும் சைபர் தரவுகள் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க் இஸ்ரேல் உளவுத்துறையின் வசம் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் ஒரு உளவுச் சாதனமாகவே பென்டகன் இஸ்ரேலைப் பயன்படுத்தி வருகிறது. இது பாதுகாப்பு கூட்டாண்மை என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை இஸ்ரேல் தன்வசப்படுத்தியுள்ளதையே காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதால், இந்த ஈரான் போருக்கான தீர்வு இனி அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ இல்லை; மாறாக, போரில் நேரடியாகப் பங்கேற்காத பிற மத்திய கிழக்கு நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

புதுக்கோட்டை: விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட அதிகாரிகள் அதிரடி உத்தரவு!

Next Post

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Next Post
ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!
  • பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!
  • ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN