தமிழகத்தில் மே 2 முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து: டிஜிபி அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வரும் மே 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2-ஆம் தேதி முதல் தங்களது விடுப்பை நீட்டிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது களப்பிரிவுகள் (L&O) மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து நிலைப் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவிலிருந்து மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




