காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சி: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 42 வயது நபர் போக்சோவில் கைது!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 42 வயது நபர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த அப்துல் ஹமீதைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.