அரசுத் திட்டத்தின் பெயர் தெரியாமல் தவித்த அமைச்சர் மூர்த்தி: மதுரையில் திமுக நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு!
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அரசுத் திட்டத்தின் பெயரே தெரியாமல் அமைச்சர் மூர்த்தி தடுமாறிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பரவை பேரூராட்சியில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதனைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திமுகவினர் திணறியதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர் மூர்த்தி, தான் வழங்க வந்த அரசுத் திட்டங்களின் பெயர்களைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாமல் மேடையிலேயே திணறியது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.