“அதிகார மமதையில் திமுகவினர்”: கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

Date:

“அதிகார மமதையில் திமுகவினர்”: கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடி கட்டிய கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அகலமான தார் சாலையில் ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மோதும் அளவிற்கு திமுகவினருக்குத் துணிச்சலும் அலட்சியமும் பெருகியுள்ளதாகச் சாடியுள்ளார். ஒரே நேரத்தில் அந்தப் பெண்ணின் உயிரையும், இன்னும் சில நாட்களில் பிறக்கவிருந்த சிசுவின் உயிரையும் காவு வாங்கியுள்ள இந்தச் சம்பவம் நெஞ்சை கனக்கச் செய்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

திமுகவினர் “உடன்பிறப்புகள்” என்ற போர்வையில் செய்யும் அராஜகங்கள் எல்லை மீறிச் செல்வதாகவும், ஆட்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இவர்களின் அதிகார மமதையால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல கனவுகளுடன் இருந்த ஒரு பெண்ணையும், பிறக்காத குழந்தையையும் கருவறுத்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், திமுகவினரின் இத்தகைய அராஜகப் போக்கு கடும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்னை உற்பத்தியைப் பெருக்கப் புதிய வியூகம்: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அதிரடி அறிவிப்பு!

தென்னை உற்பத்தியைப் பெருக்கப் புதிய வியூகம்: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங்...

“ஈரான் கடற்படைக்கு முற்றுப்புள்ளி”: அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் அதிரடி!

"ஈரான் கடற்படைக்கு முற்றுப்புள்ளி": அமெரிக்காவின் 'மிட்நைட் ஹேமர்' தாக்குதல் குறித்து டொனால்டு...

திருக்கோவிலூர் மாணவரின் விடாமுயற்சி: 5-வது முயற்சியில் UPSC தேர்வில் 197-வது இடம் பிடித்து சாதனை!

திருக்கோவிலூர் மாணவரின் விடாமுயற்சி: 5-வது முயற்சியில் UPSC தேர்வில் 197-வது இடம்...

“தமிழகத்தில் நடப்பது காட்டு தர்பார் ஆட்சி” – திருமாவளவன் மற்றும் ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

"தமிழகத்தில் நடப்பது காட்டு தர்பார் ஆட்சி" – திருமாவளவன் மற்றும் ஜோதிமணிக்கு...