கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக – பாஜகவினர் இடையே கடும் மோதல்!
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமப் பகுதியில் திமுகவினர் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் நேரில் பார்த்த பாஜகவினர், பொதுமக்களுக்கு இடையூறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் மது விற்பனை செய்யக்கூடாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக உருவெடுத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கள்ளச்சந்தை மது விற்பனை குறித்துப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் அரசியல் ரீதியான பதற்றத்தை அதிகரித்துள்ளது.