“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!
மதுரை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வராதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இது தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பிற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் சிதைத்து வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளை ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் தொடர் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் மத்தியில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.