வேலுநாச்சியார் ஓவியத்தில் குங்குமப் பொட்டு புறக்கணிப்பு? – மதுரையில் வெடித்தது புதிய சர்ச்சை!
மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டு, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட வேலுநாச்சியார் மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாலத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் ஓவியத்தில், அவரது நெற்றியில் குங்குமத் திலகம் (பொட்டு) இடம்பெறவில்லை என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
தமிழக அரசும், நெடுஞ்சாலைத்துறையும் இந்து மத அடையாளமான குங்குமப் பொட்டைத் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவசர கதியில் பாலம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், வரலாற்று நாயகியின் அடையாளத்தைச் சிதைக்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உடனடியாக அந்த ஓவியத்தில் மாற்றங்களைச் செய்து, வேலுநாச்சியாரின் நெற்றியில் குங்குமத் திலகத்தை வரைய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.