தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்
திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், அவர்களின் தோல்வியை வெளிப்படுத்துவதாக கூறினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றும், வரும் மார்ச் 1ஆம் தேதி அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.