காரிமங்கலம் அருகே இரவு பகலாக கனிமவள கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு

Date:

காரிமங்கலம் அருகே இரவு பகலாக கனிமவள கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாகனம்பட்டி, முக்குலம், பந்தாரஹள்ளி, பெரியம்பட்டி, புலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் டிராக்டர் மற்றும் கர்நாடக பதிவு எண்கள் கொண்ட டிப்பர் லாரிகள் மூலம் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இயற்கை வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல் தமிழகத்தில் இருந்து...

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சியில், முன்னாள்...

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு வங்கதேசத்தின் புதிய பிரதமர்...

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு டெல்லி...