வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் சசிகலாவின் ஆதரவாளரான ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசியலில் தனது இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில், தென் மாவட்டங்களை மையமாக வைத்து அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.