சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் அறியச் செய்யும் வகையில், சார்பில் நினைவு தபால் தலையும், சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட உள்ளன.
கன்யாகுமரி பகுதியில் மகா சிவராத்திரி தினத்தன்று நடைபெறும் மஹா சிவாலய ஓட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவாலய ஓட்டம் என்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பழமையான சிவாலயங்களுக்கு பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்று முழங்கியபடி ஓடி சென்று வழிபடும் தனித்துவமான ஆன்மிக மரத்தான் நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், மன உறுதி, உடல் வலிமை மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சியை இந்திய அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முயற்சி சிவாலய ஓட்டத்தின் பெருமையை உலகளவில் எடுத்துச் செல்லும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.