இந்தியா–ஆப்கானிஸ்தான் கூட்டு அறிக்கைக்கு எதிர்ப்பு: ஆப்கன் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

Date:

இந்தியா–ஆப்கானிஸ்தான் கூட்டு அறிக்கைக்கு எதிர்ப்பு: ஆப்கன் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்தியா–ஆப்கானிஸ்தான் கூட்டு அறிக்கையில் உள்ள குறிப்புகள் குறித்து பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஆறு நாள் இந்திய பயணமாக கடந்த வியாழக்கிழமை முட்டாகி புதுடெல்லிக்கு வந்திருந்தார். ஜெய்சங்கருடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளின் சார்பில் வெளியான கூட்டு அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் கடுமையாகக் கண்டித்து, இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இரங்கல் தெரிவித்தது.

அத்துடன், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் நோக்கில், பயங்கரவாதத்துக்கு எதிராக இரு தரப்பினரும் உறுதியை வெளிப்படுத்தினர். மேலும், ஆப்கானிஸ்தான் தனது நிலப்பரப்பை எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்காது என முட்டாகி தெரிவித்தார்.

இந்த கூட்டு அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் குறித்த குறிப்புகள் இடம்பெற்றதையும், பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்ற முட்டாகியின் கருத்தையும் பாகிஸ்தான் எதிர்த்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் ஆப்கானிஸ்தான் தூதரை அழைத்து தனது “வலுவான ஆட்சேபனைகளை” தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தானின் மீது தள்ளி வைப்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரசு தனது கடமையிலிருந்து விலக முடியாது. நான்கு தசாப்தங்களாக எங்கள் நாடு சுமார் நான்கு மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தஞ்சம் அளித்து வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத ஆப்கான் குடிமக்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும்,” என தெரிவித்துள்ளது.

அதோடு, “மற்ற நாடுகளைப் போல பாகிஸ்தானுக்கும் தனது எல்லைகளுக்குள் உள்ள வெளிநாட்டினரின் இருப்பை ஒழுங்குபடுத்தும் உரிமை உண்டு. இஸ்லாமிய சகோதரத்துவத்தின் உணர்வில், ஆப்கான் குடிமக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி விசாக்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அமைதியான, நிலையான, மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைக் காண பாகிஸ்தான் விரும்புகிறது,” என்றும் அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருச்சி மாநாட்டு பேனர் சர்ச்சை: அதிமுக – பாஜக உறவில் விரிசலா?

திருச்சி மாநாட்டு பேனர் சர்ச்சை: அதிமுக - பாஜக உறவில் விரிசலா? 2026...

“கரூர் விவகாரம்: முதலில் விசாரிக்க வேண்டியது செந்தில்பாலாஜியைத்தான்!” – சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி

"கரூர் விவகாரம்: முதலில் விசாரிக்க வேண்டியது செந்தில்பாலாஜியைத்தான்!" - சி.டி.ஆர். நிர்மல்குமார்...

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் – விவசாயிகள் கண்ணீர்!

குவியும் நெல் மூட்டைகள்: திருவாரூரில் கொள்முதல் பணிகள் முடக்கம் - விவசாயிகள்...

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் முதல்முறை: 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரை கருணைக் கொலை...