டோனட்ஸ்கை குறிவைத்து தாக்குதல் தீவிரம் – ரஷ்யா நடவடிக்கை
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
ரஷ்யா–உக்ரைன் மோதல் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் முக்கிய ரயில்வே இணைப்பாக விளங்கும் போக்ரோக்ஸ் (Pokrovsk) நகரம் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அந்த நகரின் வடக்கு பகுதி இதுவரை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த பகுதியை கைப்பற்றினால் டோனட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பகுதியை கைப்பற்ற முடியும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், ரஷ்யா விமான மற்றும் தரைப் படை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.