சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

Date:

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை எந்தவித பிணையமும் இன்றி கடன் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026–27 மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் துறையின் வளர்ச்சிக்காக ₹10,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கடன் அணுகலை எளிதாக்கும் வகையில் பிணையமில்லா கடன் வரம்பை ₹10 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக இரட்டிப்பாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால், இந்தியாவின் தொழில்துறை புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருவதாக கூறுவது மிகையல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியில்...

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள...

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி கோவை மாவட்டத்தில்...

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான...