அணு செறிவூட்டல் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் – ஈரான் உறுதி
எந்த வகையான போர் சூழ்நிலை உருவானாலும், அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை என ஈரான் அரசு உறுதியாக அறிவித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டுவது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்றும், அந்த உரிமையை நிலைநாட்ட ஏற்கனவே தங்கள் நாடு பெரும் இழப்புகளையும் விலையையும் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவத் தயார் நடவடிக்கைகள் ஈரானை அச்சுறுத்துவதில்லை என்றும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடங்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.