மக்களவை 5வது நாளாக செயலிழப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஏற்படுத்திய கடும் அமளி காரணமாக, மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதம் முறையாக நடைபெறாமல் இருக்க, பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததால், அவையில் கூச்சல் மற்றும் குழப்பம் அதிகரித்தது. இதன் காரணமாக, மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை ஒரே நாளில் மூன்று முறை இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ஐந்தாவது முறையாக நாள் முழுவதும் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.