அஜித் பவார் மறைவு – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் அகால மறைவால் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவரின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை வைத்தும், மக்களுக்கு நலன் செய்யும் மக்கள் தலைவர் என்ற மரியாதையை அவர் பெற்றிருந்தவர் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற பேரார்வத்தை கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அஜித் பவாரின் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அவரைப் பின்தொடரும் மக்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
தமில்நாட்டின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கலில், NDA கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவரின் குடும்பத்தார், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நயினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.