தமிழக அரசு ஊழியர்களின் வெளிநாட்டு பயண விதிகளில் தளர்வு – புதிய அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, அரசு பணியாளர்கள் பாஸ்போர்ட் பெற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ்போர்ட் சேவா மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர், அரசால் நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்ற பிறகே அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடு சென்ற பின்னர் அரசு அனுமதி இன்றி அங்கு வேலை தேடுவதோ அல்லது பணியில் ஈடுபடுவதோ அனுமதிக்கப்படாது என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.