மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் காலை தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு சபை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் மற்றும் காலமான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சபை இரங்கல் தெரிவித்தது.
இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பின், சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.