தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி அருகே அவரது உருவப் படத்திற்கு கிராம மக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த அணையின் மூலம் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருவதால், அவருக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக தேனி மாவட்டம் பாலர்பட்டி கிராமத்தில் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவின்போது, கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.