திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

Date:

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கைகளில், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்றும், சிறப்பு காலமுறை சம்பளம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேறவில்லை என குற்றம்சாட்டிய மக்கள் நல பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் கல்லறை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ...

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா விளக்கம்

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா...

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம்

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் சரக்கு மற்றும் போக்குவரத்து...

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி...