மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவுக்கு ரூ.850 கோடி சம்பளம்!

Date:

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவுக்கு ரூ.850 கோடி சம்பளம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, 2024–25 நிதியாண்டில் ரூ.850 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரைத் தொடர்ந்து, சத்யா நாதெள்ளா 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்டின் சிஇஓவாக பொறுப்பேற்றார். 2023–24 நிதியாண்டில் அவருக்கு ரூ.694 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டில் அவரின் ஊதியம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

நாதெள்ளாவின் தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனால், உலகளவில் நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. இதுவே அவரின் சம்பள உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அவருக்குக் கிடைத்த மொத்த ஊதியத்தில் 90 சதவீதம் மைக்ரோசாப்ட் பங்குகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அவருக்கு அடிப்படை சம்பளமாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹22 கோடி) வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டிஜிட்டல் கைது நாடகம்: ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் சைபர் மோசடி

டிஜிட்டல் கைது நாடகம்: ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் சைபர்...

F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டி நிறைவு

F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டி நிறைவு சென்னை அருகே...

வக்பு சொத்துகள் ஆன்லைன் பதிவு: உத்தரபிரதேசம் முதலிடம்

வக்பு சொத்துகள் ஆன்லைன் பதிவு: உத்தரபிரதேசம் முதலிடம் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட உமீத்...

லட்சத்தீவில் முதல்முறை முதலீட்டாளர் சந்திப்பு

லட்சத்தீவில் முதல்முறை முதலீட்டாளர் சந்திப்பு மீன்வளத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், யூனியன்...