கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்

Date:

கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்

கடலில் தவறி விழுந்து காணாமல் போன மீனவரை உடனடியாகக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அவரது உறவினர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர், நேற்று வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், எதிர்பாராத சூழலில் கடலில் தவறி விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்குப் பிறகும், கணேசனை தேடிக் கண்டுபிடிக்க அதிகாரிகள் போதிய முயற்சிகள் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவரது குடும்பத்தினர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மீனவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்கள், காணாமல் போன கணேசன் மீட்கப்படும் வரை யாருக்கும் கடலுக்குச் செல்ல அனுமதி சீட்டுகள் வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி...

போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா?

போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா? அகமதாபாத்தில் நிகழ்ந்த...

அமெரிக்க அரசியலை உலுக்கும் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்கள்!

அமெரிக்க அரசியலை உலுக்கும் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்கள்! பல ஆண்டுகளாக உலகம் எதிர்பார்த்திருந்த...

உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள்...