• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

உற்சாகத்தில் திளைத்த ரசிகர்கள் : ஜாம்பவான்களின் நினைவுகூரத்தக்க சந்திப்பு

athibantv by athibantv
டிசம்பர் 16, 2025
in Bharat
A A
0
👁️ 1.6K

உற்சாகத்தில் திளைத்த ரசிகர்கள் : ஜாம்பவான்களின் நினைவுகூரத்தக்க சந்திப்பு

இந்திய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி கலந்துகொண்டார். அந்த நிகழ்வைச் சுற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

GOAT Tour of India 2025 என்ற பெயரில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள கால்பந்தாட்ட உலகின் மகத்தான வீரர் மெஸ்ஸி, தனது பயணத்தின் முதல் நாளில் கொல்கத்தாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்காக அமைக்கப்பட்ட 70 அடி உயர சிலையை அவர் திறந்து வைத்தார். பின்னர் ஹைதராபாத் சென்ற மெஸ்ஸி, தெலங்கானா முதலமைச்சருடன் கால்பந்தாட்டம் விளையாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, தனது பயணத் திட்டத்தின் இரண்டாவது நாளில் மெஸ்ஸி மும்பையை வந்தடைந்தார். அவருடன் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இணைந்து பயணம் செய்தனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ‘ஆல் ஸ்டார்ஸ்’ கால்பந்தாட்ட போட்டியை மெஸ்ஸி பார்வையிட்டார். அங்கு, சிறுவர் சிறுமிகள் மற்றும் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களுடன் இணைந்து மெஸ்ஸி சில நிமிடங்கள் விளையாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். பின்னர், மைதானத்தைச் சுற்றி வந்த அவர், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிகளை நோக்கி கால்பந்துகளை வீசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அந்தப் பந்துகளைப் பிடித்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், மெஸ்ஸியை அன்புடன் வரவேற்றார். சந்திப்பின் போது, 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அவர் அணிந்திருந்த தனது ஜெர்ஸியை மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக, மெஸ்ஸி ஒரு கால்பந்தை சச்சினுக்கு நினைவுப் பரிசாக அளித்தார்.

கிரிக்கெட் உலகின் மாபெரும் வீரரும், கால்பந்தாட்டத்தின் மகத்தான நாயகனும் ஒரே மேடையில் சந்தித்த அந்த தருணம், ரசிகர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. அச்சமயம் பேசிய சச்சின், மெஸ்ஸி மும்பை வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும், அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் பணிவான அணுகுமுறை தன்னை ஆழமாகக் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னணி வீரர் சுனில் சேத்ரி மெஸ்ஸியை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, மெஸ்ஸி தனது கையெழுத்துடன் கூடிய அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியை சுனில் சேத்ரிக்கு வழங்கினார். இந்த நிகழ்வைக் கண்ட ரசிகர்கள் “GOAT meets GOAT” என்ற கோஷங்களை எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.

பின்னர், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மெஸ்ஸி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026

அப்போது பேசிய முதலமைச்சர் ஃபட்னாவிஸ், மெஸ்ஸியின் வருகை இந்திய இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்திய வீரர்களும் ஃபிஃபா உலக மேடையில் விளையாடும் நாளை காண்போம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இதனுடன், வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Related

Tags: Bharat
Previous Post

சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

Next Post

வறுமையின் கொடூர முகம் : 7 வயது மகள் பலி – தாய் தற்கொலை முயற்சி

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026
புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

மார்ச் 20, 2026
உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

மார்ச் 20, 2026
மேற்காசியப் போர்: இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடியில் ‘RELIEF’ காப்பீட்டுத் திட்டம்!

மேற்காசியப் போர்: இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடியில் ‘RELIEF’ காப்பீட்டுத் திட்டம்!

மார்ச் 20, 2026
Next Post
Home

வறுமையின் கொடூர முகம் : 7 வயது மகள் பலி – தாய் தற்கொலை முயற்சி

Home

அமித்ஷாவின் அரசியல் வியூகம் திமுகவை பதற வைத்துள்ளது – வானதி சீனிவாசன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.