தீபாவளிக்கு ரூ.85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

Date:

தீபாவளிக்கு ரூ.85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

டிவி, பிரிட்ஜ், செல்போன் விற்பனை ரூ.10,000 கோடியைத் தாண்டியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கம் மற்றும் மின்னணு சாதன விற்பனை சாதனை அளவில் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தந்தேரஸ் பண்டிகை நாட்களில் தங்கம் சுமார் 50–60 டன் விற்பனையாகி, இதன் மதிப்பு ரூ.85,000 கோடி என “அனைத்து இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமஸ்டிக் கவுன்சில்” தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 35–40% வரை அதிகரிப்பு எனக் கூறப்பட்டுள்ளது. தங்க விலை அதிகரித்ததால் பலர் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை வாங்கியுள்ளனர்; இதனால் வெள்ளி விற்பனை 2 மடங்கு உயர்ந்தது.

கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே கூறியதாவது:

“தீபாவளி முடிவில் தங்க விற்பனை 100–120 டன் வரை, அதாவது ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”


ஜிஎஸ்டி 2.0 தாக்கம்

2017-ல் அறிமுகமான ஜிஎஸ்டி அமைப்பில் கடந்த மாதம் மாற்றம் செய்து, 4 அடுக்குகளாக இருந்த வரி அமைப்பு தற்போது 5% மற்றும் 18% என 2 அடுக்குகளாக சுருக்கப்பட்டது. இதை “ஜிஎஸ்டி 2.0” என்றும், “மக்களுக்கான தீபாவளிப் பரிசு” என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறியதாவது:

“ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளது. கார், ஏசி, டிவி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளது. ‘தற்சார்பு இந்தியா’ நோக்கில் இது புதிய உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.”


மின்னணு சாதன விற்பனை உயர்வு

“அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு” (CAIT) வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டின் தீபாவளி காலத்தில் டிவி, பிரிட்ஜ், செல்போன், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ரூ.10,000 கோடி மதிப்பில் விற்பனையாகி உள்ளது.

இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருவதுடன், சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக CAIT தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.789 கோடி மது விற்பனை

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. வழக்கமாக தினமும் சுமார் ரூ.150 கோடி மதிப்பில் மது விற்பனை நடைபெறுகிறது.

பண்டிகை காலங்களில் விற்பனை ரூ.250 கோடி வரை உயரும் நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய வார இறுதி (3 நாட்கள்) சேர்த்து ரூ.789.85 கோடி மதிப்பில் மது விற்பனை நடந்துள்ளது.

மண்டல வாரியாக அதிகபட்ச விற்பனை:

  • மதுரை – ரூ.170.64 கோடி
  • சென்னை – ரூ.158.25 கோடி
  • திருச்சி – ரூ.157.31 கோடி
  • சேலம் – ரூ.153.34 கோடி
  • கோவை – ரூ.150.31 கோடி

கடந்த ஆண்டை விட மது விற்பனை சுமார் ரூ.30 கோடி உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி!

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர்...

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...