• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?

athibantv by athibantv
டிசம்பர் 14, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?

கொல்கத்தாவில் நடைபெற்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் நிகழ்ச்சியில், அவரை நேரில் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், ஆத்திரத்திற்கும் ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, “GOAT INDIA TOUR” என்ற பெயரில் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் மெஸ்ஸியை வரவேற்க பெருமளவு ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் அவருக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026

மைதானத்தில் மெஸ்ஸியை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில், ரசிகர்கள் ரூ.4,000 முதல் ரூ.18,000 வரை உயர்ந்த விலையில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சுமார் 20 நிமிடங்களுக்குள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதால், பெரும் தொகை செலவழித்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேடையில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டதால், சாதாரண ரசிகர்களுக்கு அவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மைதானத்தில் பெரும் குழப்பம் உருவானது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்திய சிலர், காலி பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்திற்குள் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிலர் தடுப்புகளை உடைத்து மைதானத்திற்குள் நுழைய முயன்றதால், சூழ்நிலை மேலும் பதற்றமடைந்தது. “நாங்கள் அரசியல்வாதிகளை பார்க்கவில்லை, மெஸ்ஸியை பார்க்கத்தான் வந்தோம்” என ரசிகர்கள் ஆவேசமாகக் கூறினர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிகழ்ச்சியை ஒரு மோசடி நடவடிக்கையாகவே பார்க்கிறோம் எனக் கூறிய ரசிகர்கள், செலுத்திய டிக்கெட் தொகையை திருப்பி வழங்க மாநில அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகளுக்காக மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையே, கலவர நிலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜாவேத் ஷமீம், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கைது செய்துள்ளதாகவும் கூறினார். ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும், அந்த நடைமுறைகளை காவல்துறை நேரடியாக கண்காணிக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மொத்தத்தில், தங்கள் விருப்பமான விளையாட்டு நாயகனை காண பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களின் உணர்வுகள், மோசமான நிர்வாகத் திட்டமிடலால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, ரசிகர்களின் பாதுகாப்பு, வசதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முதன்மைப்படுத்தும் பொறுப்பான நிர்வாகம் அவசியம் என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பிரிட்டன் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை – 600க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் மாயம்!

Next Post

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Next Post

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!
  • “பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!
  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN