• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

அரசியலைச் சுற்றியுள்ள தெளிவின்மை தொடர…!

athibantv by athibantv
டிசம்பர் 9, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 862 📋

அரசியலைச் சுற்றியுள்ள தெளிவின்மை தொடர…!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட உயர்பதவி அதிகாரிகள், உலகின் மிகப் பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்து நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தை சர்வதேச கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு தேசிய பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதை விரிவாகப் பார்ப்போம்.

Related posts

புகைப்படம் எடுக்கும் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் தகுந்த பதிலடி!

புகைப்படம் எடுக்கும் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் தகுந்த பதிலடி!

ஜூன் 21, 2026
கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 19, 2026

சமீபகாலமாக பாகிஸ்தானில் நடந்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் உலக நாடுகளின் கவனத்தில் அதிகளவில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, ஆசிம் முனீர் இராணுவத் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பின் அந்நாட்டில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகள், பாகிஸ்தானை கண்காணிக்கும் தேவையை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உணர வைத்துள்ளன.

ஆச்சரியமாக, பதவி ஏற்ற மறுநாளே பிரதமர் ஷெரிஃப், ஐ.எஸ்.ஐ தலைவர் ஆசிம் மாலிக் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன், பைனான்ஸ் நிறுவனத்தின் CEO ரிச்சர்ட் டெங்-ஐ இஸ்லாமாபாத்தில் சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அனுப்புபவர், பெறுபவர் தகவல் வெளிப்படாமல் பரிவர்த்தனை செய்யக்கூடிய கிரிப்டோ செயல்பாடுகள், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதால் இதுவரை பாகிஸ்தான் அரசு கிரிப்டோவுக்கு தடைவிதித்து வந்தது.

மேலும், கிரிப்டோவின் உயர்வு–தாழ்வு மிக வேகமாக மாறுவதால் முதலீட்டாளர்கள் இழப்பிற்குள்ளாகும் அபாயமும் அதிகம். அதோடு சட்டவிரோத பணப் பரிமாற்றம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அனுப்புதல் போன்ற செயல்களில் கிரிப்டோ பயன்படுத்தப்படும் வாய்ப்பு உயர். இதனால் பாகிஸ்தானின் மத்திய வங்கி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளில் கிரிப்டோ பரிவர்த்தனை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் பைனான்ஸ் CEO உடனான அண்மைய சந்திப்பு, அந்நாடு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட டிஜிட்டல் சொத்துச் சூழலை உருவாக்க விரும்புவதாகக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவிலான டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசியல் ரீதியாகவும் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் குடும்பம் பங்குள்ளதெனக் கூறப்படும் World Liberty Financial நிறுவனத்துடன் ஏற்கனவே பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பைனான்ஸ் இணைப்பு கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசிய அரசியல் நிபுணர் மைக்கேல் கூகெல்மேனின் கூற்றுப்படி, டிரம்ப் – முனீர் உறவில் கிரிப்டோவை இணைக்கும் புதிய அத்தியாயமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது. இதுவரை மத்திய வங்கியும் பாதுகாப்பு அமைப்புகளும் கிரிப்டோவால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டிவந்த நிலையில், அவற்றை சமாளிக்க பைனான்ஸ் உதவ முன்வந்துள்ளது.

பாகிஸ்தானில் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த அரசு அம்னஸ்ட்டி திட்டத்தை அறிவித்து, தண்டனையின்றி கிரிப்டோவை பதிவுசெய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், பைனான்ஸ் தளத்தில் பாகிஸ்தானியர்கள் வைத்திருக்கும் 5 பில்லியன் டாலர் அளவிலான டிஜிட்டல் சொத்துக்களை தேசிய நிதி அமைப்பில் இணைக்க வேண்டுமெனக் கூட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பைனான்ஸ் நிறுவனம் முன்பு அமெரிக்காவில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் பில்லியன் கணக்கில் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் நிறுவனர் சாங்பெங் சாவோ தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் அதே சாவோவை பாகிஸ்தான் அரசே கிரிப்டோ கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளது என்பதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், முயற்சியின் நோக்கம், எதிர்விளைவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. கட்டுப்பாடுகள் பலவீனமாக உள்ள நிலையில், கிரிப்டோ வளர்ச்சி வேகமாக அதிகரிப்பதால் வரி தவிர்ப்பு, பணப் பதுக்கல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற அபாயங்கள் மிகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

தஞ்சை பட்டீஸ்வரம் அரசு பள்ளி மாணவன் கொலை – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

Next Post

வந்தே மாதரம் பாடலின் நீக்கப்பட்ட வரிகள் – உருவான பிரிவினை!

Next Post

வந்தே மாதரம் பாடலின் நீக்கப்பட்ட வரிகள் – உருவான பிரிவினை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மாணவர்களுக்காகப் பயணத்தைத் தாமதப்படுத்திய பிரதமர் மோடி: டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருப்பு!

மாணவர்களுக்காகப் பயணத்தைத் தாமதப்படுத்திய பிரதமர் மோடி: டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருப்பு!

ஜூன் 22, 2026
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

ஜூன் 21, 2026
நாடு முழுவதும் ‘நீட்’ மறுதேர்வு நிறைவு: சுமார் 23 லட்சம் மாணவ-மாணவிகள் தீவிர பாதுகாப்புடன் எழுதினர்!

நாடு முழுவதும் ‘நீட்’ மறுதேர்வு நிறைவு: சுமார் 23 லட்சம் மாணவ-மாணவிகள் தீவிர பாதுகாப்புடன் எழுதினர்!

ஜூன் 21, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மாணவர்களுக்காகப் பயணத்தைத் தாமதப்படுத்திய பிரதமர் மோடி: டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருப்பு!
  • திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
  • நாடு முழுவதும் ‘நீட்’ மறுதேர்வு நிறைவு: சுமார் 23 லட்சம் மாணவ-மாணவிகள் தீவிர பாதுகாப்புடன் எழுதினர்!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மாணவர்களுக்காகப் பயணத்தைத் தாமதப்படுத்திய பிரதமர் மோடி: டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருப்பு!

மாணவர்களுக்காகப் பயணத்தைத் தாமதப்படுத்திய பிரதமர் மோடி: டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருப்பு!

ஜூன் 22, 2026
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலியானதற்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் – முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

ஜூன் 21, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN