கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா துவக்கம்

Date:

கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா துவக்கம்

கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருநாகேஸ்வரம் கோயில் ராகு பகவானின் பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இங்கு நடைபெறும் 11 நாள் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் பவனி வந்து கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர் உள்ளிட்ட புனித திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திர ஓதத்துடன், நந்தி உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை தனுசு லக்னத்தில் கொடிமரத்தில் ஏற்றினர்.

பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடக்க நாளை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...