• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இந்தியா–நேபாள எல்லை பிரச்சனை மீண்டும் தீவிரம்!

athibantv by athibantv
நவம்பர் 29, 2025
in Bharat
A A
0
👁️ 671

இந்தியா–நேபாள எல்லை பிரச்சனை மீண்டும் தீவிரம்!

இந்தியாவின் மூன்று எல்லை பகுதிகளையும் தனது வரைபடத்தில் இணைத்த புதிய 100 ரூபாய் நோட்டினை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டநாள் நிலவும் எல்லை விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:

உத்தராகண்டின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகியவை இந்தியாவின் நிர்வாகப் பகுதிகளாக உள்ளன. ஆனால் அவை நேபாள எல்லைக்கு அருகில் இருப்பதால், அந்தப் பகுதிகள் தங்களுக்குரியது என நேபாள அரசு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026

இந்நிலையில், நேபாள ராஷ்ட்ரா வங்கி வெளியிட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டில், இந்த மூன்று இந்தியப் பகுதிகளையும் சேர்த்த நேபாள வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசு, 1816-ஆம் ஆண்டின் சுகௌலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்லை வரையறுக்கப்பட்டதாகவும், காளி நதி கலாபானி கிராமத்தில்தான் தோன்றுகிறது என்பதால் அப்பகுதி இந்தியாவில் சேரும் எனவும் கூறி வருகிறது.

ஆனால் அந்த நதி மேலே உள்ள லிம்பியாதுரா பகுதிக்கும் தொடர்வதாக நேபாளம் வாதிடுகிறது. இந்த முரண்பாடுதான் எல்லை பிரச்சனையின் முக்கிய காரணமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

புதிய நோட்டில் மவுண்ட் எவரெஸ்ட் இடப்பக்கமாகவும், நேபாளத்தின் தேசிய மலரான “Rhododendron”-ன் நீர்க்குறி வலப்பக்கமாகவும் அமைந்துள்ளது. நடுப்பகுதியில் நேபாள வரைபடம், அசோகர தூண், ஒரு காண்டாமிருகம் மற்றும் அதன் கன்று ஆகியன இடம்பெற்றுள்ளன. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடுதலின் மூலம் நோட்டின் மதிப்பை அறிய, அசோகர தூண் அருகே சிறப்பு தொடு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய 100 ரூபாய் நோட்டின் நிறம் மற்றும் அளவு அதேபோலவே வைத்திருக்கப்படுகிறது. இடது பக்கத்தில் அரசின் உத்தரவாத உரை மற்றும் நீள்வட்ட வடிவிலான மாயாதேவி படத்தையும் வெள்ளி மெட்டாலிக் மை மூலம் பதித்துள்ளனர். பாதுகாப்பு அம்சமாக 2 மில்லிமீட்டர் தடிமனுடைய சிறப்பு நாரும் சேர்க்கப்பட்டுள்ளது. நேராகப் பார்க்கும் போது சிவப்பு நிறத்திலும், சாய்த்து பார்க்கும்போது பச்சை நிறத்திலும் மாறும் இந்த பாதுகாப்பு நார், போலி நோட்டுகளை தடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோட்டில் அச்சிடப்பட்ட காலத்தில் பணி பார்த்த மஹா பிரசாத் என்ற அதிகாரியின் கையொப்பம் சேர்ந்துள்ளது. கீழ்பகுதியில் “2081” என்ற நேபாள எண்ணியல் தொடரும் உள்ளது.

நேபாள சட்டப்படி, நோட்டின் வடிவமைப்பு ராஷ்ட்ரா வங்கியின் பொறுப்பு என்றாலும், வடிவமைப்பு மாற்றம் செய்ய அரசின் ஒப்புதல் அவசியம். அதன்படி, 2024 மே மாதத்தில் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை இந்த 100 ரூபாய் நோட்டின் வடிவமைப்பை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

புதிய நோட்டுகளின் வடிவமைப்பு, அச்சடிப்பு, விநியோகம் ஆகிய முழுப் பொறுப்பும் சீனாவின் China Bank Note Printing and Minting Corporation நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டுக்கான அச்சு செலவு சுமார் 4 ரூபாய் 4 பைசா என கணிக்கப்பட்ட நிலையில், 300 மில்லியன் 100 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஒப்பந்தத்தின் மொத்த விலை 89.96 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இன்றைய மதிப்பீட்டின் படி 1.2 பில்லியன் நேபாள ரூபா என கூறப்படுகிறது.

ஏற்கனவே 2020 மே 20-ஆம் தேதி நேபாளம் புதிய வரைபடத்தை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. அதே வரைபடம் இப்போது வெளியிடப்பட்ட புதிய 100 ரூபாய் நோட்டிலும் இடம் பெற்றதால் இது அரசியல் மற்றும் தூதரக ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நேபாளத்தின் ஒருதலைப்பட்ட முடிவு யதார்த்தத்தை மாற்றாது எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

“சீனாவை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு நம்பத்தகுந்த பாதுகாப்பு ஆதரவு இந்தியா” — பிரமோஸ் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

Next Post

ராமேஸ்வரம்: ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் – சாலைகள் சேதம்

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026
புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

மார்ச் 20, 2026
உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

மார்ச் 20, 2026
மேற்காசியப் போர்: இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடியில் ‘RELIEF’ காப்பீட்டுத் திட்டம்!

மேற்காசியப் போர்: இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடியில் ‘RELIEF’ காப்பீட்டுத் திட்டம்!

மார்ச் 20, 2026
Next Post
Home

ராமேஸ்வரம்: ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் – சாலைகள் சேதம்

Home

சென்னை ஐஐடியில் “XR தொழில்நுட்பம்” குறித்து நடைபெற்ற கருத்தரங்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.