• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இந்தியாவுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு – பாகிஸ்தானின் சிந்து மாகாணம்?

athibantv by athibantv
நவம்பர் 25, 2025
in World
A A
0
👁️ 2.2K 🔥

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் சேரும் வாய்ப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது, புவியியல் அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ.

டெல்லியில் நடைபெற்ற சிந்து சமாஜ் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரிவினையால் பாகிஸ்தானுக்கு சென்ற சிந்து பகுதி ஒருநாளில் இந்தியாவுடன் மீண்டும் இணைய வாய்ப்புண்டு என்று தெரிவித்தார். இந்திய நாகரிகத்தின் முதன்மை தாயகங்களுள் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் உருவான இடமுமாகிய சிந்து மாகாணம், ஒவ்வொரு இந்துவுக்கும் புனிதமான சிந்து நதி பாயும் மண்ணாக இருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

RelatedPosts

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

மார்ச் 21, 2026

பிரிவினை காலத்தில் சிந்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்த கொடுமைகளால் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல நேரிட்டது. சிந்து பகுதி இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது அங்கிருந்த இந்துக்களால் ஏற்கப்படவில்லை என்பதை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது நினைவுகளில் பதிவு செய்துள்ளார். சிந்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் சிந்து நதியை அதே மரியாதையுடன் பார்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைக்குப் பின்னரும் அங்கே தங்கியிருந்த இந்துக்கள் பலர் கொல்லப்பட்டதோடு, இன்றளவும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையான இந்துக்கள், மதமாற்றம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய எல்லைகளுக்கு அருகே உள்ள நாடுகளில் இந்துக்கள் அனுபவிக்கும் இத்தகைய துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக ராஜ்நாத் சிங் விளக்கினார்.

எல்லைகள் நிரந்தரமானவை அல்ல என்பதை வலியுறுத்திய அவர், கலாச்சாரம் மற்றும் நாகரீக அடிப்படையில் சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்றும், மாற்றமான சூழ்நிலையில் ஒருநாள் சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக மோரோக்கோவில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் தாமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக எழுந்து வருகின்றனர்; எனவே பெரும் ராணுவ நடவடிக்கைகள் இல்லாமலேயே பி.ஓ.கே இந்தியாவுடன் இணையும் நிலை வரும் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்திருந்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த சமீபத்திய கருத்தை வரவேற்ற சிந்து முத்தஹிதா மஹாஸ் தலைவர் ஷாஃபி பர்பத், சிந்துதேசத்தின் நீண்டகால சுதந்திர விருப்பத்துக்கும் இந்தியாவுடனான வரலாற்று உறவுக்கும் இது ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்தியா – சிந்து தேசம் ஆகியவற்றுக்கு இடையேயான “பரஸ்பர மரியாதை, இறையாண்மை, பண்பாட்டு மற்றும் நாகரிக பிணைப்புகளை” அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சித் தொடர்புக்கு சிந்துதேசம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related

Tags: World
Previous Post

அதிக வரியின் தாக்கத்தால் பிரிட்டனை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்

Next Post

ரகசியங்களை கள்ளமாக விற்ற பாகிஸ்தான் அணு நாயகன் – அமெரிக்க உளவு அதிகாரியின் வெடிக்கும் ஒப்புதல்

RelatedPosts

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

மார்ச் 21, 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

மார்ச் 21, 2026
பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

மார்ச் 20, 2026
Next Post
Home

ரகசியங்களை கள்ளமாக விற்ற பாகிஸ்தான் அணு நாயகன் – அமெரிக்க உளவு அதிகாரியின் வெடிக்கும் ஒப்புதல்

Home

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் – வாக்காளர் நீக்க விவகாரம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.