சேலத்தில் தலைவாசல் காய்கறி சந்தை சேறும், சகதியுமாக… விவசாயிகள் சங்கம் அதிருப்தி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

Date:

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான கனமழையால் சேறும், சகதியுமாக மாறி பயிர் விற்பனைக்கு தகாத நிலைக்கு சென்றுள்ளது. நுழைவாயில் முதல் சந்தையின் உள் பகுதிகள் வரை அனைத்திலும் மழைநீர் தேங்கி, வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மழைநீர் சரியாக வடிகாலில் செல்லாததால் காய்கறி மூட்டைகளை இறக்கவும் ஏற்றவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த சந்தைக்கு வருவதால் இத்தகைய சேறும் சகதியும் நிரம்பிய சூழல் அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.

சந்தையின் சீரமைப்பு இன்றியமையாதது என்று தமிழ்ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. இதன் பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகளின் முக்கிய வருமான மூலமாக இருக்கும் இந்த சந்தையை அரசு விரைவாக சீரமைக்க வேண்டும் என விற்பனையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள்...

டெல்லி தாக்குதலைச் சுற்றிய புதிய வெளிச்சம் – உமர் நபி மற்றும் கூட்டாளிகள் இடையே ஆழமான சித்தாந்த முரண்பாடு!

டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில்,...

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் – இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் அவரது கையில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பாராட்டு

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி...

புலி தாக்குதலில் உயிரிழந்த பழங்குடியின வயதான பெண்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் அருகே, புலி தாக்கியதில்...