• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

“ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது” – பிரதமர் மோடி உருக்கம்

athibantv by athibantv
அக்டோபர் 20, 2025
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.8K 🔥 📋

“ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது” – பிரதமர் மோடி உருக்கம்

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை ஏற்படுத்திய கப்பல் எனக் குறிப்பிடி, நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடும் வழக்கப்படி, இந்த ஆண்டு பிரதமர் மோடி கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

Related posts

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

ஏப்ரல் 20, 2026
இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

ஏப்ரல் 19, 2026

அப்போது வீரர்களை நோக்கி உரையாற்றிய அவர் கூறியதாவது:

“இன்று மறக்க முடியாத நாள். ஒருபுறம் கடல் – மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான மகன்கள். எல்லையற்ற சக்தியின் சின்னமாக நமது ஐஎன்எஸ் விக்ராந்த் திகழ்கிறது. கடலில் சூரிய ஒளி மின்னுவது போல, உங்களின் வீரத் தீபாவளி வெளிச்சமும் எனது மனதை ஒளிரச்செய்கிறது.

நேற்று ஐஎன்எஸ் விக்ராந்தில் நான் கழித்த இரவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உங்களின் ஆற்றல், தேசபக்தி, அர்ப்பணிப்பு எல்லாம் என்னை ஆழமாகக் கவர்ந்தது. உங்களின் பாடல்களில் ‘ஆபரேஷன் சிந்தூரின்’ வீரத்தையும் உணர முடிந்தது.

இந்த கப்பல்கள் இரும்பால் ஆனவையாக இருந்தாலும், உங்களைப் போல வீரர்கள் அதில் உயிர் ஊட்டுகின்றனர். உங்களுடன் இருந்த ஒவ்வொரு தருணத்திலும் நான் பெருமையுடனும் நன்றியுடனும் நிரம்பினேன். நேற்று இரவு நான் வழக்கத்தை விட சீக்கிரம் தூங்கினேன் – காரணம் மனநிறைவு,” என அவர் கூறினார்.

பின்னர் கடற்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, “நான் என் குடும்பத்துடன் கொண்டாடுவதுபோல், இப்போது எனது உண்மையான குடும்பமான உங்களுடன் இந்த திருநாளைக் கொண்டாடுகிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்,” என்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

“சில மாதங்களுக்கு முன், ‘விக்ராந்த்’ என்ற பெயரே பாகிஸ்தானில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை அளித்தது. அதன் பெயரே எதிரியின் தைரியத்தை உடைக்கும் சக்தியாக இருந்தது.

ஆபரேஷன் சிந்தூரில், இந்திய கடற்படையின் வீரத்தையும், விமானப்படையின் திறமையையும், ராணுவத்தின் ஒருங்கிணைப்பையும் உலகம் கண்டது. அதனால் பாகிஸ்தான் மிக விரைவாக சரணடைந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் நமது ஆயுதப் படைகள் ‘சுயசார்பு பாரத்’ நோக்கி வேகமாக முன்னேறுகின்றன. பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பை எட்டியுள்ளது. 2014 முதல் இதுவரை 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. சராசரியாக, ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய உள்நாட்டு கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது,” என்றார்.

மேலும், “பிரமோஸ், ஆகாஷ் போன்ற நமது ஏவுகணைகள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. பல நாடுகள் அவற்றை வாங்க விரும்புகின்றன. இந்தியா உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் இடம் பெறுவதே எங்கள் குறிக்கோள். கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்காக உயர்ந்துள்ளது,” என்றும் கூறினார்.

இறுதியாக பிரதமர் மோடி, “இந்தியப் பெருங்கடல் வழியாக உலகின் எண்ணெய் போக்குவரத்தின் 66% நடைபெறுகிறது. இத்தகைய முக்கிய பாதைகளைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படை உண்மையான காவலராக திகழ்கிறது,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பாகிஸ்தான் பீரங்கிகளை கைப்பற்றி ஊர்வலமாக சென்ற ஆப்கன் படைகள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

Next Post

இதயவீணை: எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபின் வெளிவந்த முதல் திரைப்படம்

Next Post

இதயவீணை: எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபின் வெளிவந்த முதல் திரைப்படம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 20, 2026
திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!
  • சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!
  • திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN