அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்டப்பட்ட ரெரா புதிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

Date:

தமிழக கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்காக அண்ணா நகரில் ரூ.97 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

மனை மற்றும் கட்டிட விற்பனை துறையில் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும், நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், வாங்குபவர்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு வழங்கவும் தமிழ்நாடு ரெரா (TNRERA) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TNREAT) நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புகளுக்காக அண்ணா நகரில் ரூ.77.60 கோடி செலவில் 19,008 சதுர அடி பரப்பளவில், 56,000 சதுர அடி கொண்ட புதிய கட்டிடம் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டது. மேலும் ரூ.19.49 கோடி செலவில் கட்டிடத்துக்குள் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அலுவலகத்தில் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க், வாகன நிறுத்தம், வரவேற்பு மண்டபம், காத்திருப்பு அறை, மின்தூக்கி, முழுமையான ஏர்-கண்டிஷனிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் எம். துரைசுவாமி, ரெரா தலைவர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, நிர்வாக உறுப்பினர் அபூர்வா, உறுப்பினர்கள் எல். சுப்பிரமணியன், டி. ஜெகந்நாதன், வழக்கறிஞர்கள் எம். கிருஷ்ணமூர்த்தி, சுகுமார் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“பாஜகவுக்கு ஆதரவாகவே அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது” — என்.ஆர். இளங்கோ எம்.பி

பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக...

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்காதீர்கள் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் கணேஷ் எச்சரிக்கை

பச்சிளம் குழந்தைகளின் குரல் நல்லதாக வரும் என்ற நம்பிக்கையில் கழுதைப் பால்...

சபரிமலையில் மண்டல வழிபாடு தொடக்கம் – பக்தர்கள் பெரும்கூட்டம் காரணமாக பல இடங்களில் நெரிசல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலகால வழிபாடு நேற்று மிகுந்த செழுமையுடன் ஆரம்பமானது....

மீனாட்சியம்மன் கோயில் பிரசாத விலை உயர்வு – திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக...