வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்

Date:

வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தனது தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பது:

“சமூகநீதியை நோக்கி நமக்கென தனியே அமைந்துள்ள கல்–முள் நிறைந்த இன்னொரு போராட்டப் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு துறைகளில் வன்னியர் சமூகத்துக்கு குறைந்தது 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பர் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நடத்த திட்டமிட்டுள்ளோம்.

திமுக அரசு செய்யும் சமூகநீதி தொடர்பான ஏமாற்றங்களையும், வாக்குறுதி துரோகங்களையும், மோசடிகளையும் மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நமது இடஒதுக்கீட்டு கோரிக்கை நிறைவேறப் போராடவும் வேண்டியது அவசியம். இதற்காகவே டிசம்பர் 17 ஆம் தேதியன்று நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தத் தவிர்க்க முடியாத சூழலை உருவாக்கும் அளவுக்கு வலிமையாக அமைய வேண்டும். போராட்ட அரங்கில் உங்களுடன் தோழமையுடன் நின்று போராடும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான...

ஏகன் நடிக்கும் புதிய படம் – இரு ஹீரோயின்களுடன்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரிலும், ‘ஜோ’, ‘கோழிப்பண்னை...

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி வாங்க ஒப்பந்தம்

இந்தியா 2026-ல் அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி (LPG)...

டெல்லி கார் குண்டுவெடிப்பு – தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...