‘ரஜினி 173’ படத்தின் நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Date:

‘ரஜினி 173’ திரைப்படம் குறித்த நிலையை இன்று கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இயக்குநராக இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டது திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விலகியதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படாததால், இணையத்தில் பல்வேறு ஊகங்கள் பரவின.

இந்நிலையில், இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனை பத்திரிகையாளர்கள் படம் குறித்த கேள்விகள் கேட்டனர். ‘ரஜினி 173’ படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவரிடம் படத்தின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் கோரப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன்,

“ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர்.சி அவரே அறிக்கையாக வெளிப்படுத்திவிட்டார். அது அவருடைய கருத்து. நான் முதலீட்டாளன்; எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுத்தால் மட்டுமே அது ஆரோக்கியமானது. ரஜினி அவர்களுக்கு பிடிக்கும் கதையை பெறும் வரை தொடர்ந்து கேட்டு வருகிறோம். கதை நன்றாக இருக்க வேண்டும் — அதுதான் முக்கியம். புதிய அறிவிப்பு வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாருங்கள்,” என்று கூறினார்.

ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றி கேட்டபோது,

“அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறோம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்,” என்று கமல் பதிலளித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக...

ஐரோப்பாவை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம் – மொசாட் அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத்...

ஒரே நாளில் இருவேளை தங்கம் விலை சரிவு — சவரன் 93,920 ரூபாயாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள்...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் — அடுத்த கல்வியாண்டில் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...