பெண் வழக்கறிஞர்கள் அதிகரிப்பு — எதிர்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயரும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்

Date:

பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (MBA) சார்பில், நீதித்துறைத் தேர்வுக்குத் தயாராகும் இளம் வழக்கறிஞர்களுக்கான வார இறுதி பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.கே. சுரேஷ் தலைமை தாங்கினார்; செயலர் ஆர். வெங்கடேசன் வரவேற்றார்.

பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து பேசிய நீதிபதி சுந்தரேஷ் கூறியதாவது:

“கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என பிரித்து பார்க்காமல், நீதி வழங்கும் ஒரே அமைப்பாக அனைத்தையும் கருத வேண்டும். தற்போது பல மாநிலங்களில் — குறிப்பாக தமிழகம், ராஜஸ்தான் — நீதிபதிகள் தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வளர்ச்சி தொடரும் என்று நம்புகிறோம். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக உயர வாய்ப்புகள் இருக்கின்றன.”

மேலும் அவர் கூறியதாவது:

“நீதித்துறைத் தேர்வுக்கு இளம் வழக்கறிஞர்கள் தயாராகுவது பாராட்டத்தக்கது. போட்டி கடுமையாக இருப்பதால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாகலாம். தன்னம்பிக்கை, ஆர்வம், விடாமுயற்சி ஆகியவற்றுடன் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வது இளம் சட்டத்துறையினருக்கு அவசியம்.”

விழாவில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், நிர்வாக நீதிபதி அனிதா, நீதிபதிகள் வேல்முருகன், அப்துல்குத்தூஸ், ரமதி, குமரேஷ்பாபு, வடமலை, குமரப்பன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றியை சங்கப் பொருளாளர் ஜி. ராஜா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘யாரும் வரத் தேவையில்லை…’ – கவுன்சிலர்களை விலக்கி செயல்படும் பிடிஆர்!

பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை...

“நடவடிக்கை எடுத்தால் நிர்மலா சீதாராமனை பாராட்டுவேன்” – போலி வாக்காளர் குற்றச்சாட்டுக்கு ஆர். எஸ். பாரதி பதில்

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள்...

சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே – ஐபிஎல் 2026 முன்னோட்டம்

அணிகள் விடுவித்த வீரர்கள் பட்டியல் வெளியீடு 2026 ஐபிஎல் மினி ஏலம் வரும்...

‘ரஜினி 173’ படத்தின் நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

‘ரஜினி 173’ திரைப்படம் குறித்த நிலையை இன்று கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். சில...