பிஹார் தோல்விக்கு பிறகு அரசியலும் குடும்பமும் விட்டு விலகுகிறார் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா

Date:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த 2020 தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்ற RJD, இந்த முறை 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மகா கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றதை எண்ணிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 243 தொகுதிகளில் 202-ல் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தோல்வையால் RJD தொண்டர்கள் பெரும் சோர்வில் உள்ள நிலையில், கட்சியின் முக்கிய குடும்பத்திலும் பிரச்சினை தோன்றியுள்ளது. லாலு பிரசாத் யாதவின் மகளும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பெற்ற ரோகிணி ஆச்சார்யா, கட்சியிலும் குடும்பத்திலும் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:

“நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், குடும்பத்திலும் இருந்து விலகுகிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் இதற்கான ஆலோசனை செய்தனர். நான் எல்லா பழிகளையும் ஏற்கிறேன்.”

ரோகிணி ஆச்சார்யா, MBBS பட்டதாரி மற்றும் மருத்துவர். இவர் ராய் ரன்விஜய் மகன் சாம்ரேஷ் சிங்குடன் 2022 இல் திருமணம் செய்துக் கொண்டார். ரோகிணி தற்போது அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் தந்தை லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, சிறுநீரக தானம் வழங்கி தந்த பாசத்தால் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி – ஓமன் பயணம் முக்கிய கட்டத்துக்கு!

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி – ஓமன் பயணம்...

பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி!

பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி! விருதுநகர் மாவட்டத்தில்...

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு திருப்பரங்குன்றம் தொடர்பான...

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்!

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்! மத்திய அரசு சமீபத்தில்...