“போலி வாக்காளர்களே ஸ்டாலின் வெற்றிக்கு காரணமா?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

Date:

தமிழ்நாட்டில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

“அவர்கள் போட்ட ஓட்டுகளால் தானா ஸ்டாலின் வெற்றி பெற்றார்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமின் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் ‘எஸ்ஐஆர்’ (Special Intensive Revision) பணிகளை பாஜக நடத்துகிறது போல திமுக கூறுவது தவறு. 1952 முதல் 13 முறை இத்தகைய திருத்தங்கள் நடந்துள்ளன. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக அமைதியாக இருந்தது. இப்போது மட்டும் ஏன் எதிர்ப்பு?”

அவர் மேலும் கூறினார்:

“கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே பெயர், ஒரே உறவினர் பெயர், ஒரே வயது — ஆனால் வேறு அட்டை எண். 933 பேர் போலி முகவரியில் வசிப்பதாக பதிவாகியுள்ளது. இத்தகைய வாக்குகள் நீக்கப்பட வேண்டாமா?”

“இந்த நிலைமையில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது போலி வாக்குகளின் விளைவா என கேட்கலாமா?” என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறினார்:

“பிஹாரில் மட்டும் 64 லட்சம் பேரின் பெயர்கள் தவறாக வாக்காளர் பட்டியலில் உள்ளன. இதை சரிசெய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரம்.”

அமெரிக்கா இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விதித்த 50 சதவீத வரி குறித்து கேட்டபோது,

“அது தொடர்பாக தொழில்துறையினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது; விரைவில் தீர்வு அறிவிக்கப்படும்,”

என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள்

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு...

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள் ஒப்படைப்பு

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள்...

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் –...

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல் – கொடூரக் கொலை

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல்...