தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி

Date:

தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் தொடர்புடையவர் என குறிப்பிட்டிருந்தார்.

தனது கீர்த்திக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி தோனி, 2014ஆம் ஆண்டு சம்பத் குமார் மற்றும் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.100 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி முன்பு தள்ளுபடி செய்த நிலையில், அவர் அதற்கு மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, தோனி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரிய சம்பத் குமார் மனுவை ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தி தள்ளுபடி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

செவிலியர் போராட்டம் : திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்

செவிலியர் போராட்டம் : திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம் தமிழகம்...

ஸ்ரீலீலாவுக்கு இணையாக நடனமாட அனுமதி கிடைக்கவில்லை – சிவகார்த்திகேயன் நகைச்சுவை

ஸ்ரீலீலாவுக்கு இணையாக நடனமாட அனுமதி கிடைக்கவில்லை – சிவகார்த்திகேயன் நகைச்சுவை சென்னை வள்ளுவர்...

உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி

உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி உத்தராகண்ட் மாநிலம்...

கொந்தளிக்கும் வங்கதேசம் : ஹாடி மரணத்தால் வெடித்த போராட்டமும் வன்முறையும்

கொந்தளிக்கும் வங்கதேசம் : ஹாடி மரணத்தால் வெடித்த போராட்டமும் வன்முறையும் சிங்கப்பூரில் சிகிச்சை...