நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் நியமனம்!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது நிர்வாக இயந்திரத்தைச் சீரமைக்கும் விதமாக மிக முக்கியமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் ஐ.ஏ.எஸ், முதலமைச்சரின் முதல்நிலை தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ், முதலமைச்சரின் இரண்டாம் நிலை தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் அலுவலகச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிப்பதற்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை விஜய் தேர்வு செய்துள்ளார். இந்த நியமனங்கள் மூலம் தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் இனி வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




