தலைமை தாங்கும் தமிழர்: இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளை வழிநடத்தும் மிக உயரிய பதவியான முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பொறுப்பிற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினண்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அவர்களை மத்திய அரசு அதிரடியாக நியமித்துள்ளது. தற்போது இந்தப் பதவியில் இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி அவர்கள் முறைப்படி பொறுப்பேற்கும் வரை, ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகப் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய ராணுவப் பொறுப்புக்குத் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்திற்காக மத்திய அரசுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.





