ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்!
உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய நீர் வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறந்து, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் ஈரானுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பயணிப்பதற்கான உரிமைகள் எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதாரம் தடையின்றி இயங்குவதற்குப் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இதனை ஒரு பொருளாதார மற்றும் மனிதாபிமானக் கட்டாயமாகப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐநா-வின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.






