பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பரப்புரையை முறைப்படி தொடங்குகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அவர், இன்று பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெரம்பூர் தொகுதியிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொளத்தூர் தொகுதியிலும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியிலும் அவர் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.








