“பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
திருவண்ணாமலை:
தமிழக அரசு பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைச் சரியாகப் பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளதாகப் புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுமார் 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்டியலின மக்களுக்கான நிதியை மாநில அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அந்த நிதியைக் கொண்டுதான் தற்போது பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார். பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றுவது அல்லது திருப்பி அனுப்புவது அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல் என அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். ஆளுங்கட்சியின் இந்த நிதிக் கொள்கை குறித்து ஏர்போர்ட் மூர்த்தி எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.








