ஆசிய இளையோர் விளையாட்டில் தங்கம் வென்ற கபடி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Date:

ஆசிய இளையோர் விளையாட்டில் தங்கம் வென்ற கபடி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவது முதல்வரின் நோக்கம். அதற்காக வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, உயரிய ஊக்கத்தொகை, மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

பஹ்ரைனின் ரிப்பா நகரில் உள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில், அக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டிகளில், கபடி விளையாட்டு முதல் முறையாக இடம்பெற்றது. ஏழு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியா தங்கம் வென்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட வீரர் அபினேஷ் மோகன்தாஸ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷ் (பெண்கள் பிரிவு) ஆவர்.

அபினேஷ் 2019 முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் தேனியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

கார்த்திகா, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி; தேசிய அளவில் 11 முறை தமிழ்நாட்டிற்காக விளையாடி 8 பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் 5 முறை மாநில அணியின் அணித்தலைவராக இருந்துள்ளார்.

இளையோர் இந்திய அணியின் துணை அணித்தலைவராக பணியாற்றிய கார்த்திகா, SDAT வழங்கும் High Cash Incentive (HCI) திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் ஊக்கத்தொகை பெற்றவர்.

அவர்களின் சாதனையை கௌரவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் — மொத்தம் ரூ.50 லட்சம் — வழங்கினார். இதில் ரூ.15 லட்சம் SDAT-இல் இருந்து மற்றும் கூடுதலாக ரூ.10 லட்சம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

“அபினேஷ், கார்த்திகா இருவரையும் நேரில் சந்தித்து பாராட்டினேன். கண்ணகி நகர் வளர்ச்சியைப் பற்றி கேட்டபோது, ‘பெருமளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது’ என்று கார்த்திகா பெருமையோடு கூறினார். எளிய பின்புலங்களில் இருந்து சாதித்த ஒவ்வொரு வீரரின் வெற்றியும் தமிழ்நாட்டின் பெருமை,”

என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர் உதயநிதி

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர்...

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – புதிய உறுப்பினர் தேர்வில் அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – புதிய உறுப்பினர் தேர்வில் அன்புமணி கோரிக்கை தமிழ்நாடு...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால்...

கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் கந்தசஷ்டி...