“சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” – கோவையில் அண்ணாமலை ஆவேசப் பேச்சு!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் கடுமையாகச் சாடினார்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும், அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும், மகளிரின் வங்கி கணக்கில் தலா ரூ. 10,000 வரவு வைக்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் அளித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.