“சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” – கோவையில் அண்ணாமலை ஆவேசப் பேச்சு!

Date:

“சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” – கோவையில் அண்ணாமலை ஆவேசப் பேச்சு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் கடுமையாகச் சாடினார்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும், அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும், மகளிரின் வங்கி கணக்கில் தலா ரூ. 10,000 வரவு வைக்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் அளித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா?

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜீவ்காந்தி விடுவிப்பு: பாலியல் புகார் பின்னணியா? திமுக...

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர்!

மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து: புதிய வான் கட்டுப்பாட்டு மையத்தைத்...

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை!

பாசத்தில் மிரட்டிய அத்தை: அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு ₹15 லட்சம்...

“வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு”: கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின் கோரத்தாண்டவம்!

"வரலாறு காணாத விநியோகத் தட்டுப்பாடு": கச்சா எண்ணெய் சந்தையில் ஈரான்-இஸ்ரேல் போரின்...