நீலகிரி எல்லைப்பகுதியில் கேரள அரசின் பெயர்ப்பலகை: கூடலூரில் நிலவும் பரபரப்பும் மாவட்ட ஆட்சியரின் விளக்கமும்
நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர் தாளூர் பகுதியில், கேரள மாநில அரசு சார்பில் திடீரென வரவேற்பு பெயர்ப்பலகை வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தமிழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, கேரளா – நீலகிரி எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இந்தப் பிரச்சினை தொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், கூடலூர் பகுதி பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் உறுதி அளித்துள்ளார்.