திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதி ஏற்போம்: பாஜக அண்ணாமலை அழைப்பு!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உறுதியினை ஏற்று, கந்த சஷ்டி கவசம் பாடி முருகப்பெருமானைப் போற்றுவோம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்து வந்துள்ள இந்தச் சிறப்பான நாளில், அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ள நிலையில், அதற்கான உறுதியினை அனைவரும் ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும். முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட இந்த நன்நாளில் நாம் மனதாரப் பிரார்த்திப்போம்” என்றும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆன்மீக அழைப்பு சமூக வலைதளங்களில் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.